சினிமா

சந்தோஷ் நாராயணனை அசிங்கப்படுத்திய இலங்கை ரசிகர்..! வெளியான சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!

Published

on

சந்தோஷ் நாராயணனை அசிங்கப்படுத்திய இலங்கை ரசிகர்..! வெளியான சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!

இந்திய இசைத்துறையில் பல தலைமுறைகளை தனது குரலினால் மயக்கியவர் சந்தோஷ் நாராயணன். ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்கள் பாடி பிரபலமடைந்த இவர், தனது பாடல்களால் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.இந்தப் பாடகர் சமீபத்தில் இலங்கையின் தலைநகரான கொழும்பிற்கு சுற்றுலாப் பயணமாக சென்றிருந்தார். அங்கு உள்ள தெருக்களில் கேஷுவலாக நடந்து கொண்டிருந்த போது திடீரென ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக தனது x தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த சம்பவம் என்னவென்றால், “நேற்று கொழும்பில் உள்ள தெருக்களில் கேஷுவலாக நடந்து கொண்டிருந்தேன். அப்ப ஒரு teen age பெடியன் ஓடி வந்து, ‘உதித் நாராயண் சார்… உங்க பாட்டுக்கள் ரொம்ப பிடிக்கும்…!’ என்று சொல்லி என் கைகளைப் பிடித்து உருக்கமான பாராட்டை தெரிவித்தான்.” என்று கூறியிருந்தார். அந்த சிறுவனின் கதையைக் கேட்டவுடனே நானே ஒரு நிமிடம் ஷாக் ஆகிவிட்டேன் என்று கூறியிருந்தார்.சந்தோஷ் நாராயணன் தனது X தளப் பக்கத்தில் இந்தச் சம்பவத்தை பகிர்ந்ததிலிருந்து ரசிகர்கள் மற்றும் மீடியா பயனாளர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர். இந்த சம்பவத்தைக் கேட்ட ரசிகர்கள் அந்த சிறுவன் உங்களை இப்படி அசிங்கப்படுத்திட்டாரே என்று கமெண்ட்ஸில் கூறி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version