இலங்கை
தவறுதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்தியர் விடுவிப்பு
தவறுதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்தியர் விடுவிப்பு
கடந்த ஏப்ரல் 23 அன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது தவறுதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் படையினரால் பிடித்து தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பூர்ணம் குமார் என்பவரே இன்றைய தினம் (14) காலை விடுவிக்கப்பட்டார்.
இந்தியா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அவர் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியா திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.