இலங்கை

நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டுக்கான காரணம் வெளியானது

Published

on

நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டுக்கான காரணம் வெளியானது

உப்பு இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவையின் முடிவை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், நாடு தழுவிய அளவில் தற்போது பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியது.

இது தொடர்பில் இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று விளக்கமளித்துள்ளது.

Advertisement

“இந்த ஆண்டு மார்ச் 26 அன்று 30,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்வதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இருப்பினும், இன்றுவரை இருப்புக்கள் இலங்கைக்கு வந்து சேரவில்லை.

“தற்போது நிலவும் பற்றாக்குறை, இந்தப் பொருள் இலங்கைக்கு வந்தவுடன் முடிவுக்கு வரும்,” என்று இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கனக அமரசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்றார். நாட்டில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக உள்ளூர் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவும் இதற்கு மற்றொரு காரணம் என்று கூறப்படுகிறது.

Advertisement

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு வரும் நாட்களில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார, அதிக விலைக்கு உப்பு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

உப்பு கிடைக்காதது மற்றும் அதிக விலைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் வந்துள்ளன என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

சந்தையில் தற்போது ஒரு கிலோ உப்பு ரூ.400க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version