இலங்கை
பகவத் கீதை வைத்து பதவியேற்ற அனிதா ஆனந்த்
பகவத் கீதை வைத்து பதவியேற்ற அனிதா ஆனந்த்
கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக தமிழக வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட நிலையில், பகவத் கீதையை வைத்து பதவியேற்ற வீடியோவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .
அதில் ‛ கனடாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து பெருமிதம் கொள்கின்றேன்.
பாதுகாப்பான நியாயமான உலகத்தை கட்டியெழுப்பவும், பிரதமர் மார்க் கார்னி மற்றும் எங்கள் குழுவினருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளேன் என அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அனிதா ஆனந்த் பெற்றோர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். 58 வயதான அனிதா ஆனந்த், ஒன்டாரியோ அரசின் நிபுணர் குழுவில் இடம்பிடித்தோடு, அதன்பிறகு கடந்த 2019ஆம் ஆண்டில் ஒக்வில்லி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன்பின் கோவிட் பரவல் சமயத்தில் பொதுசேவை மற்றும் கொள்முதல் பிரிவின் அமைச்சராகவும் அனிதா ஆனந்த் செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.