இலங்கை
மாத்தறையில் வாகன விபத்து – ஆணும், பெண்ணும் பலி!
மாத்தறையில் வாகன விபத்து – ஆணும், பெண்ணும் பலி!
மாத்தறை, எலியகந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு ஆணும் ஒரு இளம் பெண்ணும் உயிரிழந்துள்ளனர். இன்று (13) இரவு 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது சறுக்கி விழுந்ததில், பேருந்தின் பின் சக்கரத்தின் கீழ் இருவரும் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மாத்தறை தெலிஜ்ஜிவில பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆண் ஒருவரும், மாத்தறை காசிவத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை