இலங்கை
அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படுமா? வெளியாகியுள்ள தகவல்
அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படுமா? வெளியாகியுள்ள தகவல்
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலத்திட்ட உதவிகள் மே மாதம் முதல் நிறுத்தப்படும் என சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றின் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அஸ்வெசும நலப் பயனாளித் திட்டம், இடைநிலைப் பிரிவிற்கு மட்டுமே பணம் செலுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்டது.
பின்னர், அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவின் படி, இந்த வகைக்கான தொடர்புடைய கட்டணம் டிசம்பர் 2024 மற்றும் மார்ச் 2025 வரை நீட்டிக்கப்பட்டது.
அதை மீண்டும் ஏப்ரல் வரை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை