இலங்கை

மது போதையில் பஸ் வண்டியை செலுத்திய சாரதி; அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்

Published

on

மது போதையில் பஸ் வண்டியை செலுத்திய சாரதி; அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்

 மது போதையில் பஸ் வண்டியை செலுத்திய சாரதி ஒருவரை பல்லேகலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (14) கண்டியில் இருந்து மஹியங்கனை, ஹந்துன்கமுவ நோக்கிப் பயணித்த பஸ்வண்டியை பல்லேகலை பிரதேசத்தில் வைத்து தூர இடங்களுக்கான பஸ் வண்டிளை சோதனை செய்யும் திட்டத்தின் கீழ், பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

Advertisement

இதன்போது, சாரதி மது அருந்தி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்டையில் உடனடியாகப் பொலிஸார் சாரதியை கைது செய்துள்ளனர்.

‘எல்கோலைசர்’ என்ற பலூன் ஊதும் தொழில் நுட்ப முறையில் சாரதி பரீட்சிக்கப்பட்ட போதே மது அருந்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.

சாரதி கைது செய்யப்பட்டதை அடுத்து பயணிகளை வேறு பஸ்வண்டிகளில் அனுப்பவதற்கு பொலிஸார் ஒழுங்கு செய்தனர்.

Advertisement

பஸ் வண்டியில் 50 பயணிகள் வரை இருந்ததாகவும், 18 வளைவுகளைக் கொண்ட வீதியூாக செல்லும் பஸ் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் சுதத் மாசிங்கவின் பணிப்பின் பேரில், தூர இடங்களுக்குச் செல்லும் வாகனங்களுடன் சாரதிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version