இலங்கை

தமிழர் பகுதியில் மகளுக்கு ஏற்பட்ட சோக சம்பவம் ; காணமல் போன தந்தைக்கு நேர்ந்த கதி

Published

on

தமிழர் பகுதியில் மகளுக்கு ஏற்பட்ட சோக சம்பவம் ; காணமல் போன தந்தைக்கு நேர்ந்த கதி

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் உருக்குலைந்து நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் வெள்ளிக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது.

Advertisement

குறித்த சடலம் ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒரு நபரின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் அணிந்திருந்த சேட் மற்றும் சாரம் ஆகியவற்றை வைத்து இது தனது தந்தை என மகள் அடையாளம் காட்டியுள்ளதாகவும், குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினரால் சுமார் 10 நாட்களுக்கு முன்னர் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version