இலங்கை
தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறிய உறுப்பினர்!
தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறிய உறுப்பினர்!
சிவில் சமூக செயற்பாட்டாளரும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான தி.ஹிருசன் என்பவர் தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்றைய தினம் வியாழக்கிழமை(15) கோப்பாய் சேதிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
இக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழ் தேசியத்தின் இருப்பை கருதியும் எமது ஈழத் தமிழ் மக்கள் கடந்து வந்த பாதைகளை எதிர்கால சந்ததிக்கு கடத்த வேண்டும் என்ற எதிர் நோக்குடன் தனது சுய விருப்பில் வெளியேறுவதாக கூறப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.