இலங்கை

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேர் கைது

Published

on

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இணை சுகாதார அறிவியல் பட்டதாரிகளின் ஒன்றியம் சுகாதார அமைச்சு முன்பாக நடத்திய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்ட 8 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கொழும்பு வைத்தியசாலை சதுக்கம் மற்றும் சுகாதார அமைச்சு அமைந்துள்ள இடங்களுக்கு நுழைவதையும், வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வதையும் தடை செய்யும் வகையில்,

இன்று (16) முற்பகல் 12 மணி முதல் நாளை (17) மாலை 5 மணி வரை போராட்டக்காரர்களுக்கு எதிராக உத்தரவு ஒன்றை மாளிகாகந்த நீதிமன்றம் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version