இலங்கை

கடலுக்குள் செல்லும் இரணவில கடற்கரை!

Published

on

கடலுக்குள் செல்லும் இரணவில கடற்கரை!

   புத்தளம் – சிலாபம், இரணவில கடற்கரையின் 700 மீட்டர் பகுதி கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் விசேட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் போதே மேற்படி கடலரிப்பு தொடர்பாக இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேற்படி குழுவினர் சிலாபம், இரணவில கடற்கரையின் கடலரிப்பு பற்றி விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டெர்னி பிரதீப் குமார குறிப்பிட்டார்.

மேலும், இந்த கடலரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக மதிப்பிடும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், காலநிலை மாற்றம் இவ்வாறு கடலோர அரிப்பை பாதித்துள்ளது என்றும் கூறினார்.

இவ்வாறு கடலரிப்புக்கு உள்ளான பகுதிகளுக்கு மணல் மூட்டைகளை பயன்படுத்தி அரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version