இலங்கை

குளியலறையில் இயங்கிய மதுபான உற்பத்தி நிலையம் ; பொலிஸாரிடம் சிக்கிய பெண்

Published

on

குளியலறையில் இயங்கிய மதுபான உற்பத்தி நிலையம் ; பொலிஸாரிடம் சிக்கிய பெண்

அநுராதபுரம் – எட்டவீரகொல்லேவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வீடொன்றின் குளியலறையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்திவந்த பெண்ணொருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து 200,000 ரூபாய் மதிப்புள்ள கோடா, கசிப்பு மற்றும் சில பொருட்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement

சந்தேக நபரைக் கைது செய்யச் சென்றபோது, ​​அவர் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எட்டவீரகொல்லேவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. 

[W1GB7IQ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version