இலங்கை

யாழில் இடம்பெற்ற மோதலில் முன்னாள் வேட்பாளர் மருத்துவமனையில்

Published

on

யாழில் இடம்பெற்ற மோதலில் முன்னாள் வேட்பாளர் மருத்துவமனையில்

 யாழ்ப்பாணம் வடமராட்சியில் நேற்று (17) இரவு இரு குழுக்களுக்கிடையே கைகலப்பு சம்பவத்தில் முன்னாள் உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பாளர் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

Advertisement

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று புனித பிலிப்நேரியார் ஆலய திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு நேற்று (17) இடம்பெற்றது.

கொடியேற்ற நிகழ்வின் பின் நள்ளிரவு ஆலய வெளிப்புற வளாகத்தில் நின்றிருந்தவர்கள் மீது அங்கு வந்த சிலரால் திடீர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதால் இரு பகுதியினருக்கும் இடையில் கை கலப்பு இடம்பெற்றது.

இதில் பருத்தித்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் நாகர்கோவில் வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் பலத்த காயங்களுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

  சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை காயங்களுக்குள்ளான முன்னாள் வேட்பாளர் அதிக மதுபானம் அருந்தியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் இடம்பெற்ற ஆலய வெளிப்புற சூழலில் அதிக மதுபான போத்தல்கள் உடைந்த நிலையில் காணப்படும் நிலையில் மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version