இலங்கை

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

Published

on

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Advertisement

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர், விசேட மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 20,588 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு காய்ச்சல் தொடர்பில் பொதுமக்கள் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version