உலகம்

இந்தியாவால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை!

Published

on

இந்தியாவால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 19/05/2025 | Edited on 19/05/2025

 

பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது. இதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி அபு சைபுல்லா கலீத் இன்று பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். லஷ்கர் -இ- தொய்பா அமைப்பின் தலைவராக இருந்த  அபு சைபுல்லா கலீத் கடந்த 2005 ஆம் ஆண்டு பெங்களூரூவில் நடந்த இந்திய அறிவியல் மாநாடு தாக்குதல், 2006 நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் மீதான தாக்குதல், 2008 ஆம் ஆண்டு காஷ்மீர் ராம்பூரில் நடந்த சி.ஆர்.பி.எஃப் முகாம் மீதான தாக்குதல் ஆகியவற்றிற்கு மூளையாக செயல்பட்டிருக்கிறார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து இந்தியா இவரைத் தேடப்படும் குற்றவாளிகாக அறிவித்த நிலையில் மத்திய புலனாய்வு அமைப்பு  தீவிரமாக தேடிவந்தது. ஆனால்,  பயங்கரவாதி அபு சைபுல்லா கலீத் நேபாளத்தில் வினோத்குமார் என்ற போலி பெயரில்  அந்நாட்டை சேர்ந்த நக்மா பானு என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு அங்கேயே வாழ்ந்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேபாளத்தில் இருந்து பாகிஸ்தான் சென்ற அபு சைபுல்லா கலீத் சிந்து மாகாணத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் பிடின் மாவட்டம் மத்லி பகுதியில் பயங்கரவாதி  அபு சைபுல்லா கலீத் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அந்த பகுதியில் கலீத் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை சுட்டு கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.  

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • இந்தியாவால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை!

  • அரக்கோணம் பாலியல் சம்பவம்- ஆர்ப்பாட்டத்தை அறிவித்த இபிஎஸ்

  • காரில் கருகிய நிலையில் ஆண் சடலம்-போலீசார் விசாரணை

  • “வேளாண் வளர்ச்சி – 0.09% ஆக வீழ்ச்சி..” – அன்புமணி

  • உயிரைப் பறித்த போதை ஊசி; மூவர் கைது-ஒருவருக்கு வலை

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version