இலங்கை
தினமும் பழங்கள் சாப்பிடுபவர்களா நீங்கள்? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்
தினமும் பழங்கள் சாப்பிடுபவர்களா நீங்கள்? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்
உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பலர் உணவுக்கு பின் பழங்களை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், உணவுக்கு பின் பழங்கள் சாப்பிடக் கூடாது என்று சிலர் கூறுகிறார்கள். இதனால் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுக்கு பிறகு பழங்களை சாப்பிடுவது அதிகப்படியான கார்போஹைட்ரேட் சுமைக்கு வழிவகுக்கும். அரிசி மற்றும் பருப்பில் அதிக கார்போஹைட்ரேட் இருப்பதால், உணவுக்கு பின் வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்ப்பது கிளைசெமிக் சுமையை அதிகரிக்கலாம்.
இது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கக்கூடும். இதனால் சிறந்த செரிமான ஆரோக்கியத்திற்கு பழங்களை உட்கொள்ளும் நேரத்தை கவனத்தில் கொள்வது அவசியம்.
உணவுக்கு முன்னும் பின்னும் 30 நிமிட இடைவெளியில் பழங்களை சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் உணவுக்கு மிக அருகில் பழங்களை உட்கொள்வது அவற்றின் அதிக நார்ச்சத்து காரணமாக அஜீரணத்திற்கு வழிவகுக்கும் வாய்ப்புள்ளது.
நீரிழிவு நோயாளிகள், உணவுடன் பழங்களை சாப்பிடுவது ஆபத்தானது. இதனால் இரத்த சர்க்கரை அளவு உயரக்கூடும். ஆகையால், உணவு அருந்திய இரண்டு மணி நேரத்திற்கு பின் பழங்களை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், இது செரிமானத்தை தடுக்கலாம். இதனால் வயிற்றில் அசௌகரியம் ஏற்படலாம். பழங்களில் மெதுவாக ஜீரணமாகும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், அவற்றை உணவுடன் இணைப்பது செயல்முறையை மேலும் மெதுவாக்குகிறது. இந்த தாமதமான செரிமானம் ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கலாம்
அதேபோல், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும் பழங்களை சாப்பிட பரிந்துரைக்கப்படவில்லை. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்து, தூங்குவதை கடினமாக்கும். மேலும், படுக்கைக்குச் செல்வதற்கு முன் பழங்கள் அல்லது உணவுகளை சாப்பிடுவது அஜீரணம் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.
தூங்குவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை சாப்பிட வேண்டும். நிம்மதியான மற்றும் வசதியான இரவு தூக்கத்திற்கு இரவில் பழங்களை முற்றிலுமாக தவிர்க்கலாம்.