இலங்கை

நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு; கணவன் கைது

Published

on

நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு; கணவன் கைது

   9 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் (17) இரவு தனது வீட்டில் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர்.

தெனியாய, விஹாரஹேன, என்செல்வத்த, பகுதியை சேர்ந்த ராமசாமி இஷாந்தி என்ற 25 வயது கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

Advertisement

மாத்தறை தெனியாய என்சல்வத்த கொஸ்குளுன தோட்டத்தின் நேற்று இரவு பெண்ணொருவர் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளார்.

மனைவி தூக்குப் போட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக கணவன் வீட்டு வாசலுக்கு அருகில் வந்து கத்தியுள்ளார்.

அதிச்சியடைந்த அயலவர்கள் சம்பவம் தொடர்பில் தெனியாய பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

Advertisement

உயிரிழந்த பெண் 9 மாதங்கள் கர்பிணியாக இருந்துள்ளதோடு நேற்றியதினம் (18)
அவர் பிரசவத்திற்காக வைத்தியசாலைக்கு செல்வதற்கு தயாராகிக்கொண்டு இருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பெண்ணின் கணவன்தான் கொன்று தூக்கில் மாட்டிவிட்டதாக அருகில் இருந்த 7 வயதுடைய மகன் மற்றும் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவனான 27 வயதுடைய அமில்காந்த குமார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இது குறித்து தெனியாய பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version