இலங்கை

யாழில் நகையை தொலைத்தவரை தேடி நகையை கையளித்த நகைக்கடை உரிமையாளர்

Published

on

யாழில் நகையை தொலைத்தவரை தேடி நகையை கையளித்த நகைக்கடை உரிமையாளர்

யாழ்ப்பாணத்தில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 23 பவுண் நகையை தொலைத்த பெண்ணை
தேடி கண்டுபிடித்து, அந்த நகையை அவரிடமே கொடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

Advertisement

பேருந்தில் பயணித்த பெண் ஒரு கடந்த 09.04.2025 அன்று தனது நகையை
தவறவிட்டுள்ளார். இந்நிலையில், இது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பின்னர் குறித்த நகையை கண்டெடுத்தவர் அதனை நகை கடையில் கொடுத்து வேறு நகை
செய்வதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது, நடந்த சம்பவத்தையும் நகைக்கடை
உரிமையாளரிடம் கூறியுள்ளார்.

இதன்போது, நகைக்கடை உரிமையாளர் இது தவறு என அவருக்கு எடுத்துக்கூறிய பின்னர்,
நகை காணாமல் போனதாக ஏதாவது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதா
என தேடுதலில் ஈடுபட்டனர்.

Advertisement

அந்தவகையில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை தெரியவந்தது.

இந்நிலையில், நகையை தொலைத்த பெண்ணை அழைத்த நகைக்கடை உரிமையாளர், மதகுரு
ஒருவருக்கு முன்னால் வைத்து அந்த நகையை நேற்றையதினம் கையளித்துள்ளார்.

நகையை தொலைத்த பெண்ணிடமே மீண்டும் நகையை வழங்கிய சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த
குறித்த நகைக்கடை உரிமையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version