இலங்கை

பிரதமர் ஹரிணிக்கு கொலை மிரட்டல்

Published

on

பிரதமர் ஹரிணிக்கு கொலை மிரட்டல்

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில், இன்று (20) தெரிவித்தார்.

ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் இருந்து ஐபி முகவரிகளை வைத்திருப்பவர்களால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அமைச்சர் விஜேபால கூறினார்.

Advertisement

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐஜிபி தேசபந்து தென்னகோனை கொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் ஒரு தவறான தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார். இது ஒரு பொய்யான கூற்று என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version