இலங்கை

யாழில் வீடொன்றில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

Published

on

யாழில் வீடொன்றில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

  யாழில் தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிங்கராஜா செபமாலை முத்து (வயது 74) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுளளார்.

உயிரிழந்தவர் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றினை பராமரிக்கும் முகமாக அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் , கடந்த சில தினங்களாக குடும்பத்தினருடன் தொடர்பு இல்லாததால் , குடும்பத்தினர் அவரை தேடி சென்ற வேளை, உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலம் உருக்குலைந்து காணப்படுவதால் , முதியவர் இறந்து சில தினங்கள் ஆகலாம் என சந்தேக வெலியிட்டுள்ள பொலிஸார் , உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என கூறியுள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version