இலங்கை

இரத்த வாந்தி எடுத்த கும்பஸ்தார் உயிரிழப்பு!

Published

on

இரத்த வாந்தி எடுத்த கும்பஸ்தார் உயிரிழப்பு!

யாழில் மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையான குடும்பஸ்தர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்து நேற்று உயிரிழந்துள்ளார். 

 யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய தங்கவேலு கலைச்செல்வன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

 இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையானவர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் உடல் சுகயீனம் ஏற்பட்டு இரத்த வாந்தி எடுத்துள்ளார்.

Advertisement

பின்னர் காலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

 எனினும் சிகிச்சை பலனின்றி பி.ப 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சியங்களை யாழ்ப்பாணம் போலீசார் நெறிப்படுத்தினர்.

Advertisement

 உடற்கூறு பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version