இலங்கை
குரங்குகளுக்கு வைக்கப்பட்ட மின்சாரம் தாக்கி சிறுமி பலி
குரங்குகளுக்கு வைக்கப்பட்ட மின்சாரம் தாக்கி சிறுமி பலி
கண்டி – வேலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் குரங்குகளுக்கு வைக்கப்பட்ட மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேற்று (20) மாலை நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த சிறுமி நேற்று வீட்டின் ஸ்லப்பில் ஏணியைப் பயன்படுத்தி ஏறியபோது அங்கு குரங்குகள் வருவதால் கம்பியில் மின்சார இணைக்கப்பட்டிருந்தது.
இதன்போது சிறுமி மின்சாரம் தாக்கி இறந்தது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வேலம்பொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.