இலங்கை

மட்டக்களப்பில் மீன் பிடிக்க சென்றவரை இழுத்துச் சென்ற முதலை

Published

on

மட்டக்களப்பில் மீன் பிடிக்க சென்றவரை இழுத்துச் சென்ற முதலை

   மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் நேற்று மாலை (20) இளம் குடும்பஸ்தரை முதலை இழுத்துச் சென்றுள்ளது.

மந்திரியாறு நீரோடை பகுதியில் மூவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

முதலை இழுத்துச் சென்றவர் கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version