இலங்கை

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 7 பேர் காயம்

Published

on

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 7 பேர் காயம்

   சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இனிகொடவெல ரயில் கடவையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (21) காலை ஏற்பட்ட இந்த விபத்தில் சுமார் ஏழு பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

இனிகொடவெல ரயில் கடவை வழியாக ரயில் ஒன்று பயணித்த நிலையில் ரயில் கடவை மூடப்பட்டுள்ளது.

இதன்போது , இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கொள்கலன் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியது.

பின்னர் அந்த வேன் முன்னாள் இருந்த எரிபொருள் பவுசர் மீது மோதியது.

Advertisement

இந்த விபத்தில் வேன் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version