இலங்கை

5.9 மில்லியன் நிதி மோசடியில் சிக்கிய NPP உறுப்பினர்

Published

on

5.9 மில்லியன் நிதி மோசடியில் சிக்கிய NPP உறுப்பினர்

தேசிய மக்கள சக்தியின் உறுப்பினர் ஒருவர் ரூ. 5.9 மில்லியன் நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இம்முறை பதுளை – ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட NPP உறுப்பினரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

Advertisement

நிதி மோசடி தொடர்பில் முறைப்பாடளித்தவரும் அதே கட்சியில் ஹல்துமுல்ல பிரதேச சபையில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

மிளகு வியாபாரம் தொடர்பான பணப் பரிவர்த்தனை தொடர்பாக முறைப்பாட்டாளருக்கும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவருக்கும் இடையே சிறிது காலமாக தகராறு இருந்து வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, பணம் கிடைக்காதது தொடர்பாக பண்டாரவேல பிரதேச நிதி குற்றப்பிரிவில் சம்பந்தப்பட்ட முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேற்படி சந்தேக நபரான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் நேற்றையதினம்(20) கைது செய்யப்பட்டு பண்டாரவேல நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version