இலங்கை

உப்பு நாட்டை வந்தடைவதில் தாமதம்!

Published

on

உப்பு நாட்டை வந்தடைவதில் தாமதம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு நாட்டை வந்தடைவதற்கு இன்னும் சில நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவும் பாதகமான வானிலை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கப்பல் நேற்று இரவு(22) நாட்டிற்கு வரவிருந்தது.

Advertisement

இந்தநிலையில் தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 250 மெற்றிக்தொன் உப்பு மற்றும் தேசிய உப்பு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 2,800 மெற்றிக் தொன் உப்பு என மொத்தம் 3,050 மெற்றிக் தொன் உப்பு நாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது.

இருப்பினும், சீரற்ற வானிலை காரணமாக சில நாட்களுக்கு தாமதமாகலாம் எனவும், அதன் பின்னர் நாட்டிற்கு உப்பு தொடர்ந்து கொண்டுவரப்படும் எனவும் தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version