இலங்கை

கேரளாவில் கொரோனாவால் இருவர் உயிரிழப்பு!

Published

on

கேரளாவில் கொரோனாவால் இருவர் உயிரிழப்பு!

 கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கொரோனா தொற்றால் கேரளாவில் இருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்
கடந்த 2 நாட்களில் கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்கள் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72,141 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த 2 நபர்களுக்கு ஏற்கனவே இதய நோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

Advertisement

அதேவேளை கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version