இலங்கை
தமிழர் பகுதியில் புதரில் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்
தமிழர் பகுதியில் புதரில் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று வியாழக்கிழமை (22) மாலை மீட்கப்பட்ட சம்வம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.