இலங்கை

நீர்க்கட்டண அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தும் சஜித்

Published

on

நீர்க்கட்டண அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தும் சஜித்

அடுத்ததாக நீர்க்கட்டணத்தை அதிகரித்து அரசாங்கம் மக்கள் மீது சுமையேற்றவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது எக்ஸ் தளத்தில் அவர் இது தொடர்பான பதிவொன்றை இட்டுள்ளார்.

Advertisement

அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தினால் குறைக்கவிருப்பதாக உறுதியளித்தது.

ஆனால் அதற்கு மாறாக 18.3 சதவீத மின்கட்டண அதிகரிப்புக்கு இலங்கை மின்சார சபை யோசனை முன்வைத்திருக்கிறது.

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதும், நீர்க்கட்டணமும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

அது நிகழும் பட்சத்தில், ஏலவே கடுமையான சுமைக்கு உள்ளான மக்கள், மேலும் சுமைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version