உலகம்
அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியில் முழுமையான நம்பிக்கை உள்ளது
அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியில் முழுமையான நம்பிக்கை உள்ளது
புலிகளின் ஆதரவு தொடர்பான கேள்விக்கு கனேடியப் பிரதமர் கார்னி ‘நச்’ பதில்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியின் நேர்மையில், எனக்குத் துளியளவும் சந்தேகம் இல்லை என்று கனேடியப் பிரதமர் கார்னிபாராட்டியுள்ளார்.
ஈழத்துப்பின்புலம் உள்ள ஹரி ஆனந்தசங்கரி, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனவே, ‘விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர், எவ்வாறு தேசியப் பாதுகாப்பில் நேர்மையாகச்செயற்படுவார்?’ என்று தோரணையில் பிரதமர் கார்னியிடம் ஊடகவியலாளர்கள் வினவியுள்ளனர்.
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியின் நேர்மையில் எந்த அச்சமும், ஐயப்பாடும் இல்லை என்று பிரதமர் கார்னி கூறியுள்ளார். ஹரி ஆனந்தசங்கரி மிகவும் நேர்மையானவர். தனது கடமையை சிறந்த முறையில் மேற்கொள்பவர் எனவும் பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.
தேசியப்பாதுகாப்பு விவகாரத்தில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படுவதற்குச் சாத்தியமில்லை. நீதியமைச்சர், சட்டமா அதிபராகப் பணியாற்றிய ஹரிக்கு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றுவது சிரமமாக இருக்காது என்று பிரதமர் கார்னி மேலும் கூறியுள்ளார்.