இலங்கை

அரசுக்கு ஆதரவான நிறுவனமாக மாற்றப்பட்ட சிஐடி-தயாசிறி குற்றச்சாட்டு!

Published

on

அரசுக்கு ஆதரவான நிறுவனமாக மாற்றப்பட்ட சிஐடி-தயாசிறி குற்றச்சாட்டு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

322 கொள்கலன்களை விடுவித்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்திருந்ததுடன்

Advertisement

இவ் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரையும், கொள்கலன்களை விடுவித்த குழுவையும் தான் அழைக்க வேண்டும் எனவும்

இப்பிரச்சினையை எழுப்பியவர்களுக்கு மட்டுமே அழைப்பாணை அனுப்பப்பட்டதாகவும்

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அரசாங்கத்திற்கு ஆதரவான நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கும் அரசாங்கத் தரப்பினரைப் பாதுகாப்பதற்கும் இது பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version