இந்தியா
இந்தியாவில் கொரோனா 3000!
இந்தியாவில் கொரோனா 3000!
இந்தியாவில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை அண்மித்துள்ளது.
ஹொங்கொங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனாத் தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது.
இந்தநிலையில், இந்தியாவிலும் கடந்த மே மாத ஆரம்பத்தில் கொரோனாத் தொற்று மீண்டும் பரவத்தொடங்கியது.
கடந்த மே 26 ஆம் திகதி இந்தியாவில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 10 ஆக காணப்பட்ட நிலையில் தற்போது 2.710 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாத்தொற்று கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய இடங்களிலேயே அதிகரித்துள்ளது.