இலங்கை

இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல் ; பெண் ஒருவர் பலி

Published

on

இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல் ; பெண் ஒருவர் பலி

ஹைஃபாவின் கிழக்கே உள்ள வடக்கு நகரமான தம்ராவில் உள்ள இரண்டு மாடி வீட்டை ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கியதில் ஒரு பெண் உயிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலின் ஹைஃபா நகரத்தில் டசின் கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் தங்குமிடங்களில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலும் ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version