இலங்கை

ஏர் இந்தியா விமான விபத்து; தாய் மற்றும் 2 வயது மகளைத் தேடும் மகன்

Published

on

ஏர் இந்தியா விமான விபத்து; தாய் மற்றும் 2 வயது மகளைத் தேடும் மகன்

  இந்தியாவின் அகமதாபாத்த்தில் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில், விடுதியில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த தனது தாய் மற்றும் 2 வயது மகளை நபர் ஒருவர் தேடி அலைகிறார்.

கடந்த 12 ஆம் திகதி குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

Advertisement

விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.

விமானம் மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்தனர்.

விபத்து ஏற்பட்டபோது மெஸ்சில் சமையல் வேலை செய்யும் பெண்மணி, தனது இரண்டு வயது பேத்தியுடன் இருந்தது தெரியவந்துள்ளது.

Advertisement

இதனால் அவர்களை தேடும் பணியில் அவரது மகன் ஈடுபட்டு வருகிறார்.

விடுதி மெஸ்சில் சமையல் ஊழியராக ஷர்லாபென் தாகூர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

விபத்து நடைபெற்ற அன்று தனது 2 வயது பேத்தியை அழைத்துச் சென்றுள்ளார்.

Advertisement

இந்நிலையில் கட்டட இடிபாடுகளை முற்றிலும் அகற்றினால் தான் எத்தனை பேர் உயிரிழந்திருக்க கூடும் என்ற தகவல் தெரியவரும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version