இலங்கை

காங்கேசன்துறை – கீரிமலை வீதி விரைவில் விடுவிக்க நடவடிக்கை; பவானந்தராஜா எம்.பி. தெரிவிப்பு

Published

on

காங்கேசன்துறை – கீரிமலை வீதி விரைவில் விடுவிக்க நடவடிக்கை; பவானந்தராஜா எம்.பி. தெரிவிப்பு

காங்கேசன்துறை கீரிமலை வீதி விரைவில் விடுவிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பழைப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த பொதுமக்கள், காங்கேசன்துறை கீரிமலை வீதியை பாவனைக்கு விடவேண்டும் என்றும், தற்போது இந்த வீதியில் கிருஷ்ணன் கோயில்வரை குறிப்பிட்ட சிலநாள்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர் .
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பவானந்தராஜா, கடற்படையின் கட் டுப்பாட்டுக்குள் இந்தப் பிரதேசம் காணப்படுகின்றது. கடற்படையுடன் கலந்துரையாடி விரைவில் வீதியை விடுவிப்போம்- என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version