இந்தியா
குற்றால அருவிகளில் 5ஆவது நாளாக தடை நீடிப்பு!
குற்றால அருவிகளில் 5ஆவது நாளாக தடை நீடிப்பு!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை குறைந்ததால், அருவிகளில் நீர்வரத்து சீரானதுடன்
தென்காசியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் 5 ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.[ஒ]