இலங்கை

கோப்பாய் பிரதேச குழுக்கூட்டம் இரு எம்.பி.க்களே பங்கேற்பு!

Published

on

கோப்பாய் பிரதேச குழுக்கூட்டம் இரு எம்.பி.க்களே பங்கேற்பு!

கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் மாத்திரமே நேற்று நடைபெற்றது. இதன்போது யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இராமநாதன் அர்ச்சுனா, இளங்குமரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா ஆகியோரைத் தவிர ஏனையவர்கள் கலந்துகொள்ளவில்லை. 

கூட்டத்தில் பொதுமக்கள்சார் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட நிலையில் மக்கள் பிரதிநிதிகள் வருகைதராமையையிட்டு சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version