டி.வி

சரிகமப சீனியர் 5 இலங்கை சினேகா!! ரொம்ப தப்பா பேசாதீங்க… உண்மையை கூறி உருக வைத்த பெற்றோர்..

Published

on

சரிகமப சீனியர் 5 இலங்கை சினேகா!! ரொம்ப தப்பா பேசாதீங்க… உண்மையை கூறி உருக வைத்த பெற்றோர்..

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப.தற்போது சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்துள்ளது. அந்த எபிசோட்டில் பாடிய பல போட்டியாளர்கள் நடுவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தனர்.இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் மலைவாழ் மக்களில் ஒருவரான சினேகா என்பவரும் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் அதே போட்டியாளர் சினேகா, சரிகமப சீனியர் நிகழ்ச்சியில் ஏழ்மையான கோலத்தில் தோற்றமளித்துள்ளார்.இதனை பார்த்த இலங்கை வாழ் மக்கள் டிஆர்பிக்காக இப்படியெல்லாம் செய்யலாமா ஜீ தொலைக்காட்சி என்றும் இதனை அவர்கள் நிறுத்த வேண்டும் என்றும் மக்கள் கோபத்துடன் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் சினேகாவின் பெற்றோர் தன் பிள்ளை எப்படி வளர்ந்தாள் என்பதை கூறி அனைவரையும் கண்ணீர் வரவழைத்துள்ளனர். சினேகாவின் பெற்றோரின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version