இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் இலங்கை வருகை!

Published

on

சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின்  துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத், எதிர்வரும் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலைமைகள், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி திட்டங்கள், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் வகையில் இந்த பயணம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இந்த பயணத்தின் போது, கீதா கோபிநாத் இலங்கை அரசாங்க அதிகாரிகள், மத்திய வங்கி ஆளுநர், மற்றும் பிற பங்குதாரர்களுடன் சந்திப்பு நடத்தி, சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி மற்றும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version