இலங்கை

சாவகச்சேரியில் பேரவையின் சார்பில் தெரிவான இருவருக்கு எதிராக வழக்குகள்!

Published

on

சாவகச்சேரியில் பேரவையின் சார்பில் தெரிவான இருவருக்கு எதிராக வழக்குகள்!

சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேசசபைக்கு தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட இருவருக்கு எதிராகத் தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சாவகச்சேரி நகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பான அமர்வு இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் இன்று காலை இந்த வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

Advertisement

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகரசபை மற்றும் சாவகச்சேரி பிரதேசசபையில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவரும் அந்தந்தச் சபை எல்லைப் பரப்புக்குள் தம்மை ஒரு வாக்காளராகப் பதிவு செய்வதற்குத் தகுதி அற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவரின் உறுப்புரிமைகளையும் இரத்துச் செய்யத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக்கோரி இந்த வழக்குகள் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனுவைப் பரிசீலித்து உடனடியாக நடைமுறைக்கு வரக்கூடியதாக இடைக்காலத் தடை விதிக்கும் படியும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த இரு மனுக்களும் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது டன், இரு தரப்பு சமர்ப்பணங்களும் முன்வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மேலதிக நடவடிக்கைக்காக வழக்கு இன்று திகதியிடப்பட்டுள்ளது.

வழக்குத்தொடுநர் சார்பில் இன்று சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ முன்னிலையாகி வழக்கின் விவரத்தை எடுத்துரைக்கவுள்ளார். தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் வழக்கில் முன்னிலையாகவுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version