இலங்கை
சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த கடும் தீர்மானங்கள் அவசியம்; ஜனாதிபதி அநுர தெரிவிப்பு
சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த கடும் தீர்மானங்கள் அவசியம்; ஜனாதிபதி அநுர தெரிவிப்பு
சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களைத் தடுக்கவேண்டிய பொலிஸ் சேவையில் ஒரு சிலர் குற்றவாளிகளைப் பாதுகாக்கின்றனர். சிறைச்சாலை தலைமையகம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராகவேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
சட்டவிரோதமான வெளிநாட்டுக் கடவுச்சீட்டு விநியோகத்தைத் தடுப்பது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான பொறுப்பாகும். ஆனால் அந்தக் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பாதாளக் குழுக்களின் தலைவர்களுக்கு சட்ட விரோதமானமுறையில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வழங்கி யுள்ளது. சிறைக்கைதிகளுக்குத் தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்குவது சிறைச்சாலைத் தலைமையகத்தின் பிரதான பொறுப்பாகும். ஆனால் அந்தத் திணைக்களம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள நிறுவனக் கட்டமைப்பை முதலில் மறுசீரமைக்க வேண்டும். சமூகக் கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சமூகம் மற்றும் சமூகக் கட்டமைப்பிலான நிறுவனங்களை
மீண்டும் கட்டியெழுப்பவேண்டும் வரலாற்றுச் சிறப்புகளை மாத்திரம் குறிப்பிட்டுக்கொண்டிருந்தால் சமூகம் என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. சமூகக் கட்டமைப்பில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும். அவற்றை முறையாக அமுல்ப்படுத்த வேண்டும். சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டும்- என்றார்.