பொழுதுபோக்கு

சிவாஜி முதல் ஜெயலலிதா வரை: ராஜ்ய சபாவில் என்ட்ரி கொடுத்த தமிழ் சினிமா பிரபலங்கள் யார்?

Published

on

சிவாஜி முதல் ஜெயலலிதா வரை: ராஜ்ய சபாவில் என்ட்ரி கொடுத்த தமிழ் சினிமா பிரபலங்கள் யார்?

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன், தனது மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க. கூட்டணியில், ராஜ்ய சபா எம்.பி.யாக நாடாளுமன்றம் செல்ல உள்ளார்.2021-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெறவில்லை என்றாலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில், அவரது கட்சி, தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்ததை தொடர்ந்து கமல்ஹாசன் தற்போது ராஜ்யசபா எம்.பியாக நுழைய உள்ளார்.இதன் மூலம், திரையில் இருந்து நாடாளுமன்றத்திற்குச் செல்லும் 8-வது தமிழ்த் திரையுலக நடிகர் என்ற பெருமையை கமல்ஹாசன் பெறுகிறார். இவருக்கு முன்பாக நாடாளுமன்றம் சென்ற 7 முக்கிய திரையுலக பிரபலங்களை பற்றி பார்ப்போம்.எஸ்.எஸ். ராஜேந்திரன்தமிழ் சினிமாவில்,  பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமான எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜ்ய சபாவிற்குச் சென்ற முதல் தமிழ்த் திரையுலக நடிகர் என்ற பெருமைக்குரியவர். 1970 இல் திமுக – வில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நட்சத்திரமாக “லட்சிய நடிகர்”, என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன், 1957-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில், தி.மு.க.வின் சார்பில் சுயேச்சையாக தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் நடிகர் என்ற பெருமை பெற்றுள்ளார். இவர் வெற்றி பெற்றபோது தி.மு.க.வுக்கு முறையாக சின்னம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.சிவாஜி கணேசன்:எஸ்.எஸ். ராஜேந்திரனின் சமகால நடிகரான சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர் அறிமுகமான பராசக்தி படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் சிவாஜி கணேசன்., சினிமாவிலும் அரசியலிலும், புகழ்பெற்ற இவர், 1982 மார்ச் மாதம், அவர் ராஜ்ய சபாவிற்கு நியமிக்கப்பட்டார், பாலிவுட் நடிகர் நர்கிஸ் தத்தின் மறைவால் ஏற்பட்ட காலியிடத்தை காங்கிரஸ் கட்சியின் மூலம் சிவாஜி கணேசன் நிரப்பினார். ஆனால், 1984-ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சிவாஜி கணேசன், தனது ராஜ்ய சபா பதவி இரண்டையும் ராஜினாமா செய்தார்.ஜெயலலிதா:எம்.ஜி. ஆருடன் 28 படங்களில் நடித்த ஜெயலலிதா, சினிமா மற்றும் அரசியலில் சாதனை பெண்மணியாக விலகினார். இவர், 1984 மார்ச் மாதம் நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தல்களில் அதிமுகவால் களமிறக்கப்பட்டார். அக்காலத்தில், அவர் கட்சியின் பிரச்சாரச் செயலாளராகப் பணியாற்றினார். தமிழக சட்டப்பேரவையின் அப்போதைய சபாநாயகர் கே. இராஜாராம் அவர்களால் அவரது வேட்புமனு முறையாக முன்மொழியப்பட்டது, அதேசமயம் முதலமைச்சர் எம்.ஜி.ஆரே வலம்புரி ஜானின் வேட்புமனுவுக்கு ஆதரவளித்தார்.அதே சமயம், நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு 185 ஆம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டது. 1963 இல் முன்னாள் முதலமைச்சரும் திமுக நிறுவனருமான சி.என். அண்ணாதுரை, இந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். ஜெயலலிதா ராஜ்ய சபாவில் தனது முதல் உரை, அதன் தெளிவான உச்சரிப்புக்கும் நேர்த்தியான உரைநடைக்கும் பரவலாகப் பாராட்டுக்களை பெற்றிருந்தார். போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, 1989 ஜனவரியில் ராஜ்ய சபாவிலிருந்து ஜெயலலிதா ராஜினாமா செய்தார்.வைஜெயந்திமாலா பாலி:மிகவும் பிரபலமான தமிழ் திரைப்பட நாயகிகளில் ஒருவரான வைஜெயந்திமாலா பாலி, 1955 ஆம் ஆண்டில் ஹிந்தி திரைப்படங்களில் வெற்றி பெற்றார். அவர் ஒரு சிறந்த பரதநாட்டியக் கலைஞரும், ஒரு முக்கிய அரசியல் தலைவரும் ஆவார். காங்கிரஸின் உறுப்பினராக, அவர் 1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் சென்னை தெற்கு தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் 1993 இல், வைஜெயந்திமாலா ராஜ்ய சபாவிற்கு நியமிக்கப்பட்டார்,சோ எஸ். ராமசாமி:புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர், கேலிச்சித்திரக்காரர், பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் சோ எஸ். ராமசாமி, 1999 டிசம்பரில் ஒரு நியமன உறுப்பினராக ராஜ்ய சபாவிற்குள் நுழைந்தார். எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்திருக்காத சோ, வலதுசாரி அரசியல் கருத்துக்களுக்காகவும், பொது விவாதங்களில் தனது கூர்மையான, சுதந்திரமான குரலுக்காகவும் பரவலாக அறியப்பட்டவர். அக்காலத்தில் அவருடன் மேல் சபையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் இருந்தார்.எஸ்.எஸ். சந்திரன்:சோ எஸ். ராமசாமி ராஜ்ய சபாவிற்குள் நுழைந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மற்றொரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர், எஸ்.எஸ். சந்திரன், நியமிக்கப்பட்டார். திமுகவிலிருந்து வைகோவின் மதிமுகவுக்கு சென்ற சந்திரன், இறுதியாக அதிமுகவில் இணைந்தார். 2001 ஜூலை மாதம் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.ஆர். சரத்குமார்:தமிழ்த் திரைப்பட நடிகர் ஆர். சரத்குமார், எஸ்.எஸ். சந்திரன் நுழைந்த அதே 2001-ம் ஆண்டில், ராஜ்ய சபாவிற்குள் நுழைந்தார். தி.மு.க சார்பில் அவருக்கு எம்.பி.பதவி வழங்கப்பட்டது. ஜெயலலிதா தனது கட்சியின் ராஜ்ய சபா வேட்பாளர்களை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, திமுக தலைவர் மு. கருணாநிதி சரத்குமாரின் பெயரை வெளியிட்டு, அரசியல் பார்வையாளர்களையும் நடிகரையும் ஆச்சரியப்படுத்தினார்.இவர்களை தவிர, இசையமைப்பாளர் இளையராஜா ராஜ்யசபாவில் கவுரவ எம்.பி பதவி வகித்து வரும் நிலையில், நடிகர் விஜய் வசந்த் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்.பியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version