இலங்கை
சுதுமலை அம்மன் கோயில் தேர்த்திருவிழாவில் 3 சங்கிலிகள் மாயம்!
சுதுமலை அம்மன் கோயில் தேர்த்திருவிழாவில் 3 சங்கிலிகள் மாயம்!
சுதுமலை அம்மன் ஆலயத் தேர்த்திருவிழாவில் மூன்று தங்கச் சங்கிலிகள் மாயமாகியுள்ளன என்று மானிப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
மூன்று பவுண், ஒன்றரைப் பவுண், ஒன்றரைப் பவுண் என ஆறு பவுண் தங்கச் சங்கிலிகளே காணாமற் போயுள்ளன. மானிப்பாய் பொலிஸார் இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.