இந்தியா

தமிழகத்தில் அதிகரித்துள்ள ஊட்டச்சத்து குறைபாடு; தமிழக ஆளுநர் தெரிவிப்பு!

Published

on

தமிழகத்தில் அதிகரித்துள்ள ஊட்டச்சத்து குறைபாடு; தமிழக ஆளுநர் தெரிவிப்பு!

இந்தியாவின் தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா வளர்ச்சியை பதிவு செய்து வருவதாகவும், 2014க்கு முன்பு பொருளாதாரத்தில் 11ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தநிலையில், இந்தியாவில் தமிழகம் முன்னேற்றத்தை அடைந்துள்ளபோதிலும் இன்னும் ஒருசில மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இதன்போது, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மாணவர்கள் சிலமாவட்டங்களில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version