இலங்கை

தையிட்டி திஸ்ஸ விகாரையில் குவிக்கப்படும் சிங்கள மக்கள்! காணி உரிமையாளர்கள் எதிர்த்துப் போர்

Published

on

தையிட்டி திஸ்ஸ விகாரையில் குவிக்கப்படும் சிங்கள மக்கள்! காணி உரிமையாளர்கள் எதிர்த்துப் போர்

யாழ்ப்பாணம் – தையிட்டியில் சட்ட அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக சிங்கள மக்கள் பலர் ஏற்கனவே குவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் நூற்றுக்கணக்கானவர்களை அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பெளர்ணமி தினமான இன்று தையிட்டி திஸ்ஸ விகாரையில் பொசன் வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. இதை முன்னிட்டு பெருமளவான மக்கள் நேற்றும் வழிபாடுகளில் ஈடுபட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்றும் பேருந்துகளில் மக்களை அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள், விகாரையை அகற்றிவிட்டு காணியைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றும் இந்தப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன. இதனால், பிறிதொரு பாதையூடாக அவர்களை அழைத்துவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அறிய முடிகின்றது. 

Advertisement

திஸ்ஸ விகாரையில் இடம்பெறும் பொசன் வழிபாடுகளுக்காக, ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டு வருவதற்கு சில சிங்கள கடும்போக்குச் செயற்பாட்டாளர்கள் அண்மைக்காலமாக தீவிரமாக இயங்கிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version