இலங்கை
நல்லூர் சபையில் மானின் ஆட்சி!
நல்லூர் சபையில் மானின் ஆட்சி!
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசசபையில் இன்று தமிழ் மக்கள் கூட்டணி (மான்) ஆட்சியமைக்கும் என்று நம்பகரமாகத் தெரியவருகின்றது. நல்லூர் பிரதேசசபையின் அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபுவின் தலைமையில் நல்லூர் பிரதேசசபையின் சபா மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
நல்லூர் பிரதேசபையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், தமிழரசுக் கட்சியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து ஆட்சி மைப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன. முதலிரு ஆண்டுகளில் தமிழ் மக்கள் கூட்டணியும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழரசுக் கட்சியும் ஆட்சியமைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே, நல்லூர் பிர தேசசபையில் தமிழ் மக்கள் கூட்டணி இன்று ஆட்சியமைக்கும் என்று உறுதியாகத் தெரியவருகின்றது. நல்லூர் பிரதேச சபையின் கடந்த ஆட்சிக்காலத்தில் தவிசாளராகச் செயற்பட்ட ப.மயூரன் இம்முறையும் தமிழ் மக்கள் கூட்டணிகள் விரைவில் விடுவிக்கப்படும். மாவட்டச் செயலர் ஊடாகப் பிரதேச செயலாளரிடம் அந்தக் காணிகள் பாரப்படுத்தப்படும் – என்றார்.