இலங்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published

on

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

  நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 7 மாவட்டங்களில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இன்று (14) மாலை 4.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் பாதுக்கை, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, புளத்சிங்கள மற்றும் அங்கலவத்தை, கண்டி மாவட்டத்தில் கங்க இஹலகோரலே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் தெரணியகலை, தெஹியோவிட்ட, யட்டியந்தோட்டை, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, குருவிட்ட, நிவித்திகல, எஹலியகொடை, அயகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version