இலங்கை
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி பேருந்து விபத்து!
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி பேருந்து விபத்து!
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று இன்று காலை வெல்லம்பிட்டி பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் மிதொடமுல்ல சந்திக்கும் இடையில் சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள ஒரு வன்பொருள் கடையைச் சேர்ந்த மூன்று லொரிகள் இரவு நேரத்தில் கடையின் முன்சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அதிகாலையில் அதிவேகமாக வந்த பயணிகள் பேருந்து, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் மோதியது.
லொறி, நிறுத்தப்பட்டிருந்த மற்றைய மூன்று வாகனங்களின் மீது மோதியதில் நான்கு வாகனங்களும் பலத்த சேதங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளன.