இலங்கை

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகள் வடக்கின் அபிவிருத்திப் பணிகளுக்கு அமைச்சர் பிமல் தெரிவிப்பு!

Published

on

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகள் வடக்கின் அபிவிருத்திப் பணிகளுக்கு அமைச்சர் பிமல் தெரிவிப்பு!

விடுதலைப்புலிகளின் வைப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட தங்கத்தை மக்களிடம் கையளிக்கவே எதிர்பார்க்கின்றோம். எனினும், அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாத நகைகள் வடக்கு அபிவிருத்தி நிதியமொன்று உருவாக்கப்பட்டு வடக்கு அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் – இவ்வாறு சபை முதல்வரும். அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய செல்வம் எம்.பி., ‘மக்களின் நகைகளை மக்களிடமே ஒப்படைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கூறியதாவது:-
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே இராணுவத்தின் வசமிருந்த தங்கம், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவை சரியாக மதிப்பிடப் படவேண்டும். இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தவேண்டும். அந்த அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர். மக்களுக்கு அவற்றை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பமாகும். அத்தாட்சிப் பத்திரம் இல்லாத சில நகைகள் மிஞ்சும் என எதிர்பார்க்கின்றோம். அவை வடக்கு அபிவிருத்தி நிதியமொன்று உருவாக்கப்பட்டு அதில் வைப்பிலிடப்படும். அந்த நிதியத்துக்கு அரசாங்கமும் நிதிவழங்கும். புலம்பெயர் மக்களும் பங்களிப்பு வழங்கலாம். அந்த நிதியம் ஊடாக வடக்கு கட்டியெழுப்பப்படும் – என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version