இந்தியா

மாலைத்தீவின் சுற்றுலாத் துறை தூதராக நடிகை கத்ரீனா கைப் நியமனம்!

Published

on

மாலைத்தீவின் சுற்றுலாத் துறை தூதராக நடிகை கத்ரீனா கைப் நியமனம்!

பொலிவூட்  சினிமாவின் முன்னணி நடிகையான கத்ரீனா கைப் சுற்றுலாத் துறைக்கான உலகளாவிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுடனான ராஜதந்திர மோதலுக்குப் பின்னர் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க இது ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

Advertisement

மாலத்தீவுகளின் தேசிய சுற்றுலா வாரியம் இதுகுறித்து  நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பை தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டது.

அதில் ‘எங்கள் உலகளாவிய  தூதராக கத்ரீனா கைப் இருப்பது எங்களுக்கு மிகுந்த பெருமையைத் தரும் தருணம், என அந்த நிறுவாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உலகளாவிய தூதராக கத்ரினா கைப் நியமிக்கப்பட்டமை  சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில்  ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதட்டங்கள் தணிந்துள்ளதை குறிக்கிறது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version